Friday 3rd of May 2024 01:39:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
7 நாடுகளில் காச நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கு 57 மில்லியன் டொலர் ஒதுக்குகிறது அமெரிக்கா!

7 நாடுகளில் காச நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கு 57 மில்லியன் டொலர் ஒதுக்குகிறது அமெரிக்கா!


இந்தியா உட்பட ஏழு நாடுகளில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக 57 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

காசநோய் நோயால் உலக முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு எதிராக போராடி வரும் இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, தஜிகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய 7 நாடுகளுக்கு உதவும் வகையிலேயே 57 மில்லியன் டொலர் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த கூட்டு முயற்சி, கொரோனா தொற்றால் போராடி வரும் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என யு.எஸ்.எய்ட் தெரிவித்துள்ளது.

‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2019-ஆம் ஆண்டை விட 2020-ஆம் ஆண்டில் 10 இலட்சத்துக்கும் குறைவான மக்களே காசநோய் சிகிச்சைக்கு எடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், 10 கோடி மக்கள் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் 1.4 கோடி பேர் காச நோயால் உயிரிழக்கின்றனர்.

கொரோனா வைரசின் நீண்டகால தாக்கத்தின் காரணமாக, காசநோய் மேலும் 6.3 கோடி மக்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் காசா நோயால் கூடுதலாக 1.4 கோடி இறப்புகள் ஏற்படும். கொரோனா தொற்று ஏற்படும் காசநோயாளிகளின் இறப்பு வீதம் மூன்று மடங்கு அதிகமாக ஏற்படலாம் எனவும் யு.எஸ். எய்ட் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா, அமெரிக்கா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE